• May 19 2024

திருமலையில் துப்பாக்கியை மறைத்து வைத்து மிருகங்களை வேட்டையாடி வந்த நபர் கைது..! samugammedia

Chithra / May 26th 2023, 10:46 am
image

Advertisement

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபரொரேவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை - திம்பிரிவெவ பிரதேசத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை மறைத்து வைத்துக் கொண்டு மிருகங்களை வேட்டையாடி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ- 01ம் வட்டாரத்தில் வசித்து வரும் அப்புஹாமிகே வீரசேகர (65வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.


திருமலையில் துப்பாக்கியை மறைத்து வைத்து மிருகங்களை வேட்டையாடி வந்த நபர் கைது. samugammedia உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபரொரேவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை - திம்பிரிவெவ பிரதேசத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை மறைத்து வைத்துக் கொண்டு மிருகங்களை வேட்டையாடி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ- 01ம் வட்டாரத்தில் வசித்து வரும் அப்புஹாமிகே வீரசேகர (65வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement