யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகம் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து நடத்தும் தொழிற்சந்தை இன்று(10) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த தொழிற் சந்தையில் பல தொழில் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் கல்வியினையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளும்,
கல்வி வழிகாட்டி நிறுவனங்களும் தமது செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
குறித்த நிகழ்வில் இளைஞர், யுவதிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.