கடும் மழை காரணமாக அரநாயக்க – மாவனெல்ல பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மரம் விழுந்ததால் உயர் அழுத்த மின்கம்பி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதால் மாவனெல்லையில் இருந்து அரநாயக்க நோக்கி பயணிக்கும் மக்கள் அனைவரும் வெலிகல்ல ஊடாக உஸ்ஸாபிட்டிய வீதியை பயன்படுத்துமாறு மாவனெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளார்.