மாத்தறை - அக்குரஸை பகுதியில் இருந்து செப்டம்பர் மாதம் 25
ஆம் திகதி உலக சாதனை படைப்பதற்காக நடைபயணத்தை ஆரம்பித்த எஸ்.பாலகுமார்
இன்று திங்கட்கிழமை பகல் திருகோணமலை - மூதூர் பகுதியை வந்தடைந்தார்.
இவர்
60 நாட்களில் 3089 கிலோ மீற்றர் தூரம் நாடு பூராகவும் நடைபவணியை
மேற்கொண்டு உலக சாதனை படைப்பதற்காக இந்த நடை பயணத்தை ஆரம்பித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.