நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.
இந்நிலையில் மறுபுறம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை 68,497 டெங்கு நோயாளர்கள்இனங்காணப்பட்டுள்ளனர்.
அதில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.
மத்திய மாகாணத்தில் 7,878 பேரும்,வடமேற்கு மாகாணத்தில் 5,671 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,651 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை கொழும்பில் 14,475 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன் கடந்த சில மாதங்களில் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 32பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் மீண்டும் சிக்கல். 32பேர் உயிரிழப்பு.samugammedia நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.இந்நிலையில் மறுபுறம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை 68,497 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.அதில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.மத்திய மாகாணத்தில் 7,878 பேரும்,வடமேற்கு மாகாணத்தில் 5,671 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,651 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேவேளை கொழும்பில் 14,475 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.அத்துடன் கடந்த சில மாதங்களில் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 32பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.