• May 17 2024

கிளிநொச்சி மக்களுக்கு சிக்கல்..! குடிநீர் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..!

Chithra / Nov 11th 2023, 8:56 am
image

Advertisement

 


கிளிநொச்சி மாவட்டத்தில்  குடிநீர் விநியோகமானது ஞாயிற்றுக்கிழமை (12) முதல் மட்டுப்படுத்தப்பட்ட நேரத்திற்கு மட்டுமே விநியோகிப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கிளிநொச்சி குளத்து நீரில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக போதுமான நீரை சுத்திகரித்து விநியோகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதனால் குடிநீரை மட்டுப்படுத்தி விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கிளிநொச்சி டிப்போச் சந்தி, பரந்தன், பூநகரி, பொன்னகர் ஆகிய நீர்த்தாங்களிலிருந்து நீர் பெறும் கிராமங்களுக்கு பின்வரும் ஒழுங்கின் பிரகாரம் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பூநகரி  பிரதேசத்திற்கு தினமும் பிற்பகல் மூன்று 3 முதல் இரவு 10 வரைக்கும், 

பரந்தன், உமையாள்புரம், தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பிரதேசங்களுக்கு தினமும் காலை 8 மணி முதல் பகல் 11  மணி வரைக்கும், 

பொன்னகர், பாரதிபுரம், மலையாளபுரம்,  கிராமங்களுக்கு தினமும் காலை 7 முதல் முற்பகல் 10 வரைக்கும்,

கிளிநொச்சி டிப்போச் சந்தி நீர்த்தாங்கியிலிருந்து நீரை பெறுகின்ற கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு தினமும் காலை 7 மணி முதல்  பிற்பகல் 3 மணி வரைக்கும்,

நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.


கிளிநொச்சி மக்களுக்கு சிக்கல். குடிநீர் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.  கிளிநொச்சி மாவட்டத்தில்  குடிநீர் விநியோகமானது ஞாயிற்றுக்கிழமை (12) முதல் மட்டுப்படுத்தப்பட்ட நேரத்திற்கு மட்டுமே விநியோகிப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.கிளிநொச்சி குளத்து நீரில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக போதுமான நீரை சுத்திகரித்து விநியோகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதனால் குடிநீரை மட்டுப்படுத்தி விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி கிளிநொச்சி டிப்போச் சந்தி, பரந்தன், பூநகரி, பொன்னகர் ஆகிய நீர்த்தாங்களிலிருந்து நீர் பெறும் கிராமங்களுக்கு பின்வரும் ஒழுங்கின் பிரகாரம் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது பூநகரி  பிரதேசத்திற்கு தினமும் பிற்பகல் மூன்று 3 முதல் இரவு 10 வரைக்கும், பரந்தன், உமையாள்புரம், தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பிரதேசங்களுக்கு தினமும் காலை 8 மணி முதல் பகல் 11  மணி வரைக்கும், பொன்னகர், பாரதிபுரம், மலையாளபுரம்,  கிராமங்களுக்கு தினமும் காலை 7 முதல் முற்பகல் 10 வரைக்கும்,கிளிநொச்சி டிப்போச் சந்தி நீர்த்தாங்கியிலிருந்து நீரை பெறுகின்ற கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு தினமும் காலை 7 மணி முதல்  பிற்பகல் 3 மணி வரைக்கும்,நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement