தேசிய மின் கட்டமைப்பில் மேலதிகமாக 120 மெகாவாட் நீர் மின்சாரத்தை சேர்க்கும் உமா ஓயா திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன்போது, உமா ஓயா நீர் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் எதிர்வரும் 2023 ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என கட்டுமான நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஜூன் மாதத்துக்குள் தேசிய மின் கட்டமைப்பில் குறித்த மின்நிலையம் இணைக்கப்படும் என்று குறித்த அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.