• May 04 2024

வவுனியாவை உலுக்கிய கோர விபத்து- விசேட அதிரடிப்படையினர் இருவர் உயிரிழப்பு- 6பேர் படுகாயம்! samugammedia

Tamil nila / Oct 10th 2023, 6:39 am
image

Advertisement

வவுனியா வெளிக்குளம் பகுதியில் நேற்றைய தினம் இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்

நேற்றைய தினம் இரவு 9.30 மணியளவில் மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ரக வண்டி ஒன்று  வெளிக்குளம் பகுதியில் பயணிக்கும் போது வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்து சம்பவத்தில் ஜீப் வண்டியில் பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்  ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் குறித்த ஆறு பேரில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வவுனியாவை உலுக்கிய கோர விபத்து- விசேட அதிரடிப்படையினர் இருவர் உயிரிழப்பு- 6பேர் படுகாயம் samugammedia வவுனியா வெளிக்குளம் பகுதியில் நேற்றைய தினம் இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்நேற்றைய தினம் இரவு 9.30 மணியளவில் மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ரக வண்டி ஒன்று  வெளிக்குளம் பகுதியில் பயணிக்கும் போது வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து சம்பவத்தில் ஜீப் வண்டியில் பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்  ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் குறித்த ஆறு பேரில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement