• Apr 28 2024

ரஷ்யாவின் பக்கம் திரும்பிய வாக்னர் படை..!ஜோ பைடன் உடன் ஆலோசனை நடத்திய உக்ரைன் அதிபர்..!samugammedia

Sharmi / Jun 26th 2023, 10:40 am
image

Advertisement

எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை ரஷ்யாவிற்கு எதிராக திரும்பிய பரபரப்பான சூழலில்  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், வாக்னர் கூலிப்படை ரஷ்யாவிற்கு எதிராக திரும்பியதுடன், ரஷ்யாவின்  ரோஸ்டோவ் ஆன் டான் இராணுவ கட்டுப்பட்டு மையத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அத்துடன் மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்வதற்கு உள்ளதாகவும்  அறிவித்தது.

இதனால் ரஷ்யா பெரும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியது. அதாவது, ஒரு பக்கம் உக்ரைனுக்கு எதிராக போராடுவதுதான், மறுபுறம் வாக்னர் படையை  ஒடுக்க வேண்டிய சூழல் எழுந்தது.

இந்நிலையில், அதிபர் புடின்  வாக்னர் படை வீரர்களை கண்டதும் சுட்டுமாறு  உத்தரவிட்டார். இந்த நிலையில்தான் ரஷ்யாவின்  மிக நெருங்கிய நாடான பெலாரஸ் மத்தியஸ்தராக செயற்பட்டு, புரிகோசினிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

அதன் பொழுது, புரிகோசின் பெலாரஸ் செல்ல வேண்டும் எனவும் வாக்னர் படை மீதான கிரிமினல் வழக்குகளை ரஷ்யா திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும்  ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதையடுத்து, வாக்னர் படை மாஸ்கோ நோக்கி செல்வதிலிருந்து  பின்வாங்கியது.

இவ்வாறான சூழலில்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பேசினேன். நேர்மறை மற்றும் உத்வேகம் அளிக்கும் உரையாடல் நடைபெற்றது.

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் மற்றும் தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்தும்  விவாதித்தோம். சர்வதேச உத்தரவு நடைமுறைக்கு வரும்வரை, சர்வதேச நாடுகள் ரஷ்யாவிற்கு  அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது குறித்து ஜெலன்ஸ்கி மற்றும் பைடன் உடன் ஆலோசனை நடத்தியதை உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை, இது தனிப்பட்ட  விடயம் என்றும்  தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பக்கம் திரும்பிய வாக்னர் படை.ஜோ பைடன் உடன் ஆலோசனை நடத்திய உக்ரைன் அதிபர்.samugammedia எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை ரஷ்யாவிற்கு எதிராக திரும்பிய பரபரப்பான சூழலில்  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.இந்நிலையில், வாக்னர் கூலிப்படை ரஷ்யாவிற்கு எதிராக திரும்பியதுடன், ரஷ்யாவின்  ரோஸ்டோவ் ஆன் டான் இராணுவ கட்டுப்பட்டு மையத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அத்துடன் மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்வதற்கு உள்ளதாகவும்  அறிவித்தது.இதனால் ரஷ்யா பெரும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியது. அதாவது, ஒரு பக்கம் உக்ரைனுக்கு எதிராக போராடுவதுதான், மறுபுறம் வாக்னர் படையை  ஒடுக்க வேண்டிய சூழல் எழுந்தது. இந்நிலையில், அதிபர் புடின்  வாக்னர் படை வீரர்களை கண்டதும் சுட்டுமாறு  உத்தரவிட்டார். இந்த நிலையில்தான் ரஷ்யாவின்  மிக நெருங்கிய நாடான பெலாரஸ் மத்தியஸ்தராக செயற்பட்டு, புரிகோசினிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.அதன் பொழுது, புரிகோசின் பெலாரஸ் செல்ல வேண்டும் எனவும் வாக்னர் படை மீதான கிரிமினல் வழக்குகளை ரஷ்யா திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும்  ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதையடுத்து, வாக்னர் படை மாஸ்கோ நோக்கி செல்வதிலிருந்து  பின்வாங்கியது.இவ்வாறான சூழலில்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பேசினேன். நேர்மறை மற்றும் உத்வேகம் அளிக்கும் உரையாடல் நடைபெற்றது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் மற்றும் தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்தும்  விவாதித்தோம். சர்வதேச உத்தரவு நடைமுறைக்கு வரும்வரை, சர்வதேச நாடுகள் ரஷ்யாவிற்கு  அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது குறித்து ஜெலன்ஸ்கி மற்றும் பைடன் உடன் ஆலோசனை நடத்தியதை உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை, இது தனிப்பட்ட  விடயம் என்றும்  தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement