• May 11 2024

குருநாகலில் காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞர் மாயம்!

Tharun / Apr 27th 2024, 7:58 pm
image

Advertisement

குருநாகலில் அமைந்துள்ள குளியாபிட்டிய  பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் தனது காதலியின் வீட்டுக்கு சென்ற  நிலையில் மாயமாகியுள்ளார்.

குளியாப்பிட்டிய, கபலாவ பகுதியை சேர்ந்த 36 வயதுடைய சுசித ஜயவன்ச என்பவரே 6 நாட்களாக காணாமல்போயுள்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் உணவுக்கடை ஒன்றின் உரிமையாளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் கடந்த 22 ஆம் திகதி குளியாப்பிட்டிய வஸ்ஸாஉல்ல பிரதேசத்தில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கு தனது கடையின் ஊழியர் ஒருவருடன் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த வீட்டிற்கு சென்றதிலிருந்து அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லையென விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர் சென்றதாக கூறப்படும் வீட்டின் உரிமையாளரிடமிருந்து நண்பரொருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் சுசிதவின் நண்பர் இது தொடர்பில் தெரிவிக்கையில் 

"செவ்வாய்கிழமை இரவு 7:58 மணிக்கு சிகிடி எனப்படும்  காதலியின் தந்தையிடமிருந்து  எனக்கு அழைப்பு வந்தது, ஒரு தந்தையாக என் மகளுக்கு நன்மை செய்துள்ளேன். அவனை நான் கொன்றுவிட்டேன், இனி அவனால் திரும்பி வர முடியாது’ என்று கூறியதாக குறித்த நண்பர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகத்திற்கிடமான முறையில் காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகலில் காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞர் மாயம் குருநாகலில் அமைந்துள்ள குளியாபிட்டிய  பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் தனது காதலியின் வீட்டுக்கு சென்ற  நிலையில் மாயமாகியுள்ளார்.குளியாப்பிட்டிய, கபலாவ பகுதியை சேர்ந்த 36 வயதுடைய சுசித ஜயவன்ச என்பவரே 6 நாட்களாக காணாமல்போயுள்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர் உணவுக்கடை ஒன்றின் உரிமையாளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.அவர் கடந்த 22 ஆம் திகதி குளியாப்பிட்டிய வஸ்ஸாஉல்ல பிரதேசத்தில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கு தனது கடையின் ஊழியர் ஒருவருடன் சென்றுள்ளார்.இதன்போது குறித்த வீட்டிற்கு சென்றதிலிருந்து அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லையென விசாரணையில் தெரியவந்துள்ளது.குறித்த இளைஞர் சென்றதாக கூறப்படும் வீட்டின் உரிமையாளரிடமிருந்து நண்பரொருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் சுசிதவின் நண்பர் இது தொடர்பில் தெரிவிக்கையில் "செவ்வாய்கிழமை இரவு 7:58 மணிக்கு சிகிடி எனப்படும்  காதலியின் தந்தையிடமிருந்து  எனக்கு அழைப்பு வந்தது, ஒரு தந்தையாக என் மகளுக்கு நன்மை செய்துள்ளேன். அவனை நான் கொன்றுவிட்டேன், இனி அவனால் திரும்பி வர முடியாது’ என்று கூறியதாக குறித்த நண்பர் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகத்திற்கிடமான முறையில் காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement