• May 17 2024

புத்தாண்டு தள்ளுபடி பொருட்கள் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Chithra / Apr 11th 2024, 11:51 am
image

Advertisement

 

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் காணப்படும் புத்தாண்டு தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது

இந்நாட்களில் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கொள்வனவு செய்வதில் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுவதால்,

தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு  செய்யும் போது   கவனம் செலுத்த வேண்டுமென நுகர்வோர் அதிகாரசபையின் விசேட சோதனை மற்றும் விசாரணைகளின் பணிப்பாளர் சஞ்சய் வீரசிங்க தெரிவித்தார்.

பண்டிகைக் காலங்களில் தள்ளுபடி பொருட்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், விலையில் உள்ள வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, தள்ளுபடி செய்யப்பட்ட பொருட்களின் தரம் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொள்வனவு செய்யப்படும் எந்தவொரு பொருளுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், ஆதாரங்களுடன் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டார். 

புத்தாண்டு தள்ளுபடி பொருட்கள் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை  பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் காணப்படும் புத்தாண்டு தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளதுஇந்நாட்களில் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கொள்வனவு செய்வதில் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுவதால்,தள்ளுபடிகள் மூலம் பொருட்களை கொள்வனவு  செய்யும் போது   கவனம் செலுத்த வேண்டுமென நுகர்வோர் அதிகாரசபையின் விசேட சோதனை மற்றும் விசாரணைகளின் பணிப்பாளர் சஞ்சய் வீரசிங்க தெரிவித்தார்.பண்டிகைக் காலங்களில் தள்ளுபடி பொருட்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், விலையில் உள்ள வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, தள்ளுபடி செய்யப்பட்ட பொருட்களின் தரம் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.கொள்வனவு செய்யப்படும் எந்தவொரு பொருளுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், ஆதாரங்களுடன் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement