அடுத்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் பரந்தப்பட்ட கூட்டணி அமையும். அந்த கூட்டணியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரிவசம் தெரிவித்தார்.
"ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் கட்சியின் கொள்கை, வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. ஐ.தே.கவின் கொள்கை திட்டங்களாலேயே நாட்டை மீட்க முடியும்.
கடந்த காலங்களில் வரிசை யுகம் உருவானது. நாட்டை நிர்வகிக்க முடியாமல் தலைவர்கள் ஓடினர். நாட்டை பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வந்தார். தற்போது அவர் வரிசை யுகத்துக்கு முடிவு கட்டியுள்ளார். எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் மற்றும் வட்டி வீதம் என்பன குறையவுள்ளது எனவும் அகிலவிராஜ் தெரிவித்தார்.