• May 01 2024

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம்..! - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

Chithra / Apr 18th 2024, 1:40 pm
image

Advertisement

 

நாடாளுமன்ற, ஜனாதிபதி தேர்தல்களை பிற்போடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றால் அதனை சிறிதளவும் சகித்துக்கொள்ளப்போவதில்லை அதனை எதிர்க்கவும் தயங்கப்போவதில்லை  என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேர்தல்களை பிற்போடுவது சர்வஜனவாக்குரிமை குறித்த மக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரட்ண,

மக்களின் வாக்குரிமைக்கு சவால் விடுக்கின்ற விடயமாகவும் இது மாறும் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்களில் எது முதலில் இடம்பெறவேண்டும் என தெரிவிக்கும் அரசமைப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை.

அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் இந்த தேர்தல்கள் இடம்பெறவேண்டும் என்றே சட்டம் தெரிவிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு பதில் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிபுரிகின்றார், தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் இந்த நவம்பருடன் முடிவிற்கு வருகின்றது. நவம்பருக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் முடிவடைந்ததும் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும். நாடாளுமன்றத்தை அதற்கு முன்னர் கலைக்க முடியுமென்றால் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டியது நாடாளுமன்றத்தினதும் தேர்தல் ஆணையகத்தினதும் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம். - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை  நாடாளுமன்ற, ஜனாதிபதி தேர்தல்களை பிற்போடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றால் அதனை சிறிதளவும் சகித்துக்கொள்ளப்போவதில்லை அதனை எதிர்க்கவும் தயங்கப்போவதில்லை  என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.தேர்தல்களை பிற்போடுவது சர்வஜனவாக்குரிமை குறித்த மக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரட்ண,மக்களின் வாக்குரிமைக்கு சவால் விடுக்கின்ற விடயமாகவும் இது மாறும் என தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்களில் எது முதலில் இடம்பெறவேண்டும் என தெரிவிக்கும் அரசமைப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை.அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் இந்த தேர்தல்கள் இடம்பெறவேண்டும் என்றே சட்டம் தெரிவிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு பதில் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிபுரிகின்றார், தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் இந்த நவம்பருடன் முடிவிற்கு வருகின்றது. நவம்பருக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் முடிவடைந்ததும் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும். நாடாளுமன்றத்தை அதற்கு முன்னர் கலைக்க முடியுமென்றால் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டியது நாடாளுமன்றத்தினதும் தேர்தல் ஆணையகத்தினதும் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement