சென்னையை அண்மித்த கடற்கரைப் பகுதியில் திமிங்கிலச் சுறாக்கள் கூட்டம் கூட்டமாக வருவது அண்மிய காலங்களில் அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் அமைப்பின் தலைவர் சுப்ரஜா தாரிணி தலைமையிலான குழு நேரில் சென்று ஆராய்ச்சியொன்றை நடாத்தியதன் விளைவாக மீன்பிடித் தடைக்காலம் இதுவரை காலமும் அமுலில் இருந்ததால் தற்போது இரை தேடி கரைக்கு வந்திருக்கின்றன என அவர் குறிப்பிட்டார்.
தெற்கு ஆபிரிக்காவின் ஜொஹானஸ்ப்ரக் நகருக்கு அண்மித்த கடலை மையமாகக் கொண்டு வாழ்வன. குறிப்பாக இவை ஏப்பரவ் முதல் ஜீன் வரையான காலப்பகுதியில் ஒரு வலசைப் பாதையில் செல்லுமென மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனுடன் இச் சுறாக்கள் இந்தியாக் கடற்கரை மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிக்கருகே காணப்பட்டுவதாகவும் தமிழகத்தில் மிக அரிதாகவே காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவற்றை விட இந்தியக் கடற்கரைப் பரபபில் 3000 வரையிலான இடங்களில் செயற்கை நீரடிப் பாதைகள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் பாதுகாக்கப்பட்ட விலங்குகளான இம் மீன் வகைகள் அதிகளவில் இங்கு தென்படும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.