• Sep 20 2024

பிரபல தமிழ் பாடசாலையில் நடந்த சம்பவம்..! பொலிஸார் விசாரணை samugammedia

Chithra / Aug 18th 2023, 11:55 am
image

Advertisement

கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் அமைந்துள்ள பிரதான தமிழ் பாடசாலையொன்றின் மாணவர்களுக்கிடையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் திம்புல பத்தனை பொலிஸாருக்கு இரு தரப்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலையின் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையில் பாடசாலை நிறைவடைந்ததற்கு பின்னர் பாடசாலை மைதானத்தில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவிடமிருந்து பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அந்த முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் திம்புல பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


பிரபல தமிழ் பாடசாலையில் நடந்த சம்பவம். பொலிஸார் விசாரணை samugammedia கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் அமைந்துள்ள பிரதான தமிழ் பாடசாலையொன்றின் மாணவர்களுக்கிடையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் திம்புல பத்தனை பொலிஸாருக்கு இரு தரப்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பாடசாலையின் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையில் பாடசாலை நிறைவடைந்ததற்கு பின்னர் பாடசாலை மைதானத்தில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவிடமிருந்து பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அந்த முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் திம்புல பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement