மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் கடமையாற்றும் மூன்று சட்டத்தரணிகள் தொடர்பாக முகநூலில் பதிவினை இட்டமை, பின்னூட்டமை செய்தமை தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவானால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
போதை மாத்திரை வழக்கொன்று தொடர்பாக தமது தொழில் நிமிர்த்தம் மூன்று சட்டத்தரணிகள் அவர் சார்பாக நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந்நிலையில் இவ் சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகிய விடயத்தை விமர்சித்து முகநூலில் பதிவினை இட்டமைக்காகவும், பதிவுக்கான பின்னூட்டம் இட்டமைக்காகவும் இம் மூவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முகநூல் பதிவு பின்னணியில் இன்னும் 10 க்கு மேற்பட்டோர் இருப்பதாகவும் இவர்களையும் கைது நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முகநூலில் சட்டத்தரணிகளை விமர்சித்த மூவருக்கு ஏற்பட்ட கதி. samugammedia மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் கடமையாற்றும் மூன்று சட்டத்தரணிகள் தொடர்பாக முகநூலில் பதிவினை இட்டமை, பின்னூட்டமை செய்தமை தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவானால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.போதை மாத்திரை வழக்கொன்று தொடர்பாக தமது தொழில் நிமிர்த்தம் மூன்று சட்டத்தரணிகள் அவர் சார்பாக நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.இந்நிலையில் இவ் சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகிய விடயத்தை விமர்சித்து முகநூலில் பதிவினை இட்டமைக்காகவும், பதிவுக்கான பின்னூட்டம் இட்டமைக்காகவும் இம் மூவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.முகநூல் பதிவு பின்னணியில் இன்னும் 10 க்கு மேற்பட்டோர் இருப்பதாகவும் இவர்களையும் கைது நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.