• May 20 2024

கட்டார் புலம் பெயர் தொழிலாளர்களின் எதிர்காலம் என்ன?

crownson / Dec 20th 2022, 8:50 am
image

Advertisement

கட்டாரில் மிக பிரம்மாண்டமாக உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடந்து முடிந்துள்ளது.

உலகக் கோப்பை இறுதிப்போட்டியை உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், இத்தனை பெரிய பிரம்மாண்டத்தை கட்டார் அரசு தன்னுடையை சொந்த பலத்தால் மட்டுமே சாத்தியப்படுத்தவில்லை.

மைதானத்தை கட்டுவது தொடங்கி உலகக் கோப்பை தொடரின் பெரும்பாலான வேலைகளில் கட்டார்  அரசு புலம்பெயர் தொழிலாளர்களை வைத்தே சாத்தியப்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 29 லட்சம் வெளிநாட்டு வேலையாட்களின் துணையுடன் தான் இந்த உலகக் கோப்பையை கட்டார்  இத்தனை பிரம்மாண்டத்துடன் நடத்தி காட்டியுள்ளது.

இந்த உலகக் கோப்பை பணியில் ஈடுபட்டு சுமார் 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஊடகக் தகவல்கள் கூறுகின்றன.

மேலும்இ பெரும்பாலான தொழிலாளர்கள் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

குறிப்பாக Human rights watch அமைப்பைச் சேர்ந்த மிங்கி வார்டன் இந்த உலகக் கோப்பை போட்டி குறித்து கூறுகையில் கட்டார் உலகக் கோப்பை பல தவறான காரணங்களுக்காக நினைவு கொள்ள வேண்டும்.

மிக ஆடம்பரமான உலகக் கோப்பை, பல உயிர்பலிகளை வாங்கிய உலகக் கோப்பை என்றுள்ளார்.

இந்நிலையில், உலகக் கோப்பை முடிந்த நிலையில் புலம் பெயர் தொழிலாளர்களின் நிலை அடுத்த என்ன என்ற கேள்விக்குறி முன் நிற்கிறது.

அரும்பாடுபட்டு இந்த உலகக் கோப்பை நடைபெறுவதை சாத்தியமாக்கிய புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கி அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கட்டார் அரசுக்கு சர்வதேச நாடுகளும் சமூகங்களும் தொடர் அழுத்தம் தந்து வருகின்றன.

கட்டார் புலம் பெயர் தொழிலாளர்களின் எதிர்காலம் என்ன கட்டாரில் மிக பிரம்மாண்டமாக உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடந்து முடிந்துள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியை உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.ஆனால், இத்தனை பெரிய பிரம்மாண்டத்தை கட்டார் அரசு தன்னுடையை சொந்த பலத்தால் மட்டுமே சாத்தியப்படுத்தவில்லை. மைதானத்தை கட்டுவது தொடங்கி உலகக் கோப்பை தொடரின் பெரும்பாலான வேலைகளில் கட்டார்  அரசு புலம்பெயர் தொழிலாளர்களை வைத்தே சாத்தியப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 29 லட்சம் வெளிநாட்டு வேலையாட்களின் துணையுடன் தான் இந்த உலகக் கோப்பையை கட்டார்  இத்தனை பிரம்மாண்டத்துடன் நடத்தி காட்டியுள்ளது.இந்த உலகக் கோப்பை பணியில் ஈடுபட்டு சுமார் 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஊடகக் தகவல்கள் கூறுகின்றன. மேலும்இ பெரும்பாலான தொழிலாளர்கள் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன. குறிப்பாக Human rights watch அமைப்பைச் சேர்ந்த மிங்கி வார்டன் இந்த உலகக் கோப்பை போட்டி குறித்து கூறுகையில் கட்டார் உலகக் கோப்பை பல தவறான காரணங்களுக்காக நினைவு கொள்ள வேண்டும். மிக ஆடம்பரமான உலகக் கோப்பை, பல உயிர்பலிகளை வாங்கிய உலகக் கோப்பை என்றுள்ளார்.இந்நிலையில், உலகக் கோப்பை முடிந்த நிலையில் புலம் பெயர் தொழிலாளர்களின் நிலை அடுத்த என்ன என்ற கேள்விக்குறி முன் நிற்கிறது. அரும்பாடுபட்டு இந்த உலகக் கோப்பை நடைபெறுவதை சாத்தியமாக்கிய புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கி அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கட்டார் அரசுக்கு சர்வதேச நாடுகளும் சமூகங்களும் தொடர் அழுத்தம் தந்து வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement