• May 01 2024

இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது யார்? இன்று எடுக்கப்படவுள்ள தீர்மானம்...!

Sharmi / Apr 17th 2024, 11:44 am
image

Advertisement

இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை அரசாங்கத்தின் ஊடாக இறக்குமதி செய்வதா? அல்லது தனியார் மூலம் இறக்குமதி செய்வதா? என்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக  வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக  இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  10,000 மெட்ரிக் டன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருந்தது.

கடந்த காலங்களில், பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததன் மூலம், நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலையும் சடுதியதாக அதிகரித்துள்ள நிலையில்  இறக்குமதி செய்யப்படும் இந்திய பெரிய  வெங்காயத்தை நாட்டுக்கு கொண்டு வர 10 முதல் 15 நாட்கள் ஆகும் என அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது யார் இன்று எடுக்கப்படவுள்ள தீர்மானம். இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை அரசாங்கத்தின் ஊடாக இறக்குமதி செய்வதா அல்லது தனியார் மூலம் இறக்குமதி செய்வதா என்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக  வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பாக  இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை  10,000 மெட்ரிக் டன் பெரிய வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருந்தது.கடந்த காலங்களில், பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததன் மூலம், நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலையும் சடுதியதாக அதிகரித்துள்ள நிலையில்  இறக்குமதி செய்யப்படும் இந்திய பெரிய  வெங்காயத்தை நாட்டுக்கு கொண்டு வர 10 முதல் 15 நாட்கள் ஆகும் என அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement