• Mar 01 2025

கசூரினாவில் அமைந்துள்ள கடற்படை முகாமை அகற்றாதது ஏன் - முன்னாள் தவிசாளர் கேள்வி

Chithra / Mar 1st 2025, 10:11 am
image

  

உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி காணப்பட்ட வேளை, கசூரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமை தற்போதுள்ள பகுதியில் இருந்து அகற்றிவிட்டு அதனை கிழக்கு புறமாக நகர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த தீர்மானத்தினை பிரதேச சபையின் செயலாளர் ஏன் செயற்படுத்தவில்லை என காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு.பாலச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காரைநகர் கசூரினா கடற்கரையில் உள்ள கடற்படை முகாமை அகற்றுவதற்கும் அதனை கசூரினா சுற்றுலா மையத்திற்கு கிழக்கு பக்கமாக நகர்த்துவதற்கும் 14.09.2022 கடற்படை அதிகாரிகளின் பிரசன்னத்துடன் கசூரினா கடற்கரை மண்டபத்தில்  நடைபெற்ற பிரதேச சபையின் 54 வது அமர்வில் முடிவெடுக்கப்பட்டது.

எமது சபை கலைக்கப்பட்ட பின்பு செயலாளரினால் இது சம்மந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதுவரை கடற்படை முகாம் ஏன் அகற்றப்படவில்லை?

கடற்படையினரின் முகாமிற்கு விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் மதிப்பீடு செய்யப்பட்ட 1320000/-நிதி சபையின் மூலதன அபிவிருத்தி நிதியிலிருந்து நான் தவிசாளராக பதவி வகித்த காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது. இது சம்மந்தமாக சபையின் செயலாளர் எடுத்த மேல் நடவடிக்கை என்ன? 

இதுவரை முகாம் அகற்றப்படாமல் இருப்பதனையும் இன்னும் பல விடயங்களையும்  ஆளுனர் அவர்களிடம் நேரடியாக என்னால் எடுத்துச் செல்லப்படும். 

அமைச்சர் திரு.சந்திரசேகரன் அண்மையில் கசூரினா கடற்கரைக்கு  பிரதேச சபையால் நடாத்தப்பட்ட திறப்பு விழா ஒன்றிற்கு வருகை தந்தார். அவ்விழாவிற்கு பிரதேச செயலர் அழைக்கப்படவில்லை. முன்னாள் சபையின் உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை பொதுமக்கள் அழைக்கப்படவில்லை. முழுக்க முழுக்க சபையின் உத்தியோகஸ்தர்களே மண்டபத்தில் 95 வீதமானவர்கள் அமர்ந்திருந்தனர். 

அச்சந்தர்ப்பத்தில் உரையாற்றிய செயலாளர் அவர்கள் கடற்படை முகாம் அகற்றுவது தொடர்பாக அமைச்சரிடம் எதுவித கோரிக்கையும் முன்வைக்கவுமில்லை. சபையின் தீர்மானங்களை நிறைவேற்ற பொறுப்பான செயலாளர் தவறிய விடயங்கள் சம்மந்தமாக தொடர்ந்து எனது பதிவில் எடுத்து வரப்படுவதோடு உரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்படும் என தெரிவித்தார்.


கசூரினாவில் அமைந்துள்ள கடற்படை முகாமை அகற்றாதது ஏன் - முன்னாள் தவிசாளர் கேள்வி   உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி காணப்பட்ட வேளை, கசூரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமை தற்போதுள்ள பகுதியில் இருந்து அகற்றிவிட்டு அதனை கிழக்கு புறமாக நகர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த தீர்மானத்தினை பிரதேச சபையின் செயலாளர் ஏன் செயற்படுத்தவில்லை என காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு.பாலச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,காரைநகர் கசூரினா கடற்கரையில் உள்ள கடற்படை முகாமை அகற்றுவதற்கும் அதனை கசூரினா சுற்றுலா மையத்திற்கு கிழக்கு பக்கமாக நகர்த்துவதற்கும் 14.09.2022 கடற்படை அதிகாரிகளின் பிரசன்னத்துடன் கசூரினா கடற்கரை மண்டபத்தில்  நடைபெற்ற பிரதேச சபையின் 54 வது அமர்வில் முடிவெடுக்கப்பட்டது.எமது சபை கலைக்கப்பட்ட பின்பு செயலாளரினால் இது சம்மந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது இதுவரை கடற்படை முகாம் ஏன் அகற்றப்படவில்லைகடற்படையினரின் முகாமிற்கு விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் மதிப்பீடு செய்யப்பட்ட 1320000/-நிதி சபையின் மூலதன அபிவிருத்தி நிதியிலிருந்து நான் தவிசாளராக பதவி வகித்த காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது. இது சம்மந்தமாக சபையின் செயலாளர் எடுத்த மேல் நடவடிக்கை என்ன இதுவரை முகாம் அகற்றப்படாமல் இருப்பதனையும் இன்னும் பல விடயங்களையும்  ஆளுனர் அவர்களிடம் நேரடியாக என்னால் எடுத்துச் செல்லப்படும். அமைச்சர் திரு.சந்திரசேகரன் அண்மையில் கசூரினா கடற்கரைக்கு  பிரதேச சபையால் நடாத்தப்பட்ட திறப்பு விழா ஒன்றிற்கு வருகை தந்தார். அவ்விழாவிற்கு பிரதேச செயலர் அழைக்கப்படவில்லை. முன்னாள் சபையின் உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை பொதுமக்கள் அழைக்கப்படவில்லை. முழுக்க முழுக்க சபையின் உத்தியோகஸ்தர்களே மண்டபத்தில் 95 வீதமானவர்கள் அமர்ந்திருந்தனர். அச்சந்தர்ப்பத்தில் உரையாற்றிய செயலாளர் அவர்கள் கடற்படை முகாம் அகற்றுவது தொடர்பாக அமைச்சரிடம் எதுவித கோரிக்கையும் முன்வைக்கவுமில்லை. சபையின் தீர்மானங்களை நிறைவேற்ற பொறுப்பான செயலாளர் தவறிய விடயங்கள் சம்மந்தமாக தொடர்ந்து எனது பதிவில் எடுத்து வரப்படுவதோடு உரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்படும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement