• May 04 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட பெண்..! samugammedia

Chithra / Jul 29th 2023, 2:56 pm
image

Advertisement

போலி விசா அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, வெளிநாடு செல்ல முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று அவரை கைது செய்துள்ளனர்.

இதன்போது, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குறித்த பெண்ணுக்கு ஒத்துழைப்பு வழங்கிய, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட பெண். samugammedia போலி விசா அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, வெளிநாடு செல்ல முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று அவரை கைது செய்துள்ளனர்.இதன்போது, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குறித்த பெண்ணுக்கு ஒத்துழைப்பு வழங்கிய, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement