குரோம்பேட்டையில் தெரு நாய் விரட்டியதில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை என்றும் இல்லாத அளவுக்கு பெருகிவிட்டதாகவும் அவை சாலைகளில் செல்பவர்களை விரட்டி கடிப்பதும், விரட்டும்போது பொதுமக்கள் கீழே விழுந்து காயமடைவதும் தொடர்ந்து இடம் பெறுவதால் மக்கள் துன்பமடைந்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட குரோம்பேட்டை, சுபாஷ் நகர், விஸ்வேஸ்வரன் தெருவில் டியூசன் முடிந்து சகோதரியுடன் வீட்டுக்கு சென்ற பிளஸ்-1 மாணவி, வெறிபிடித்த தெரு நாய் ஒன்று விடாமல் துரத்தியதில், கீழே விழுந்து காயமடைந்தார் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 26-வது வார்டுக்கு உட்பட்ட குரோம்பேட்டை, காந்தி நகரில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் இரவு வேளை வெளியே சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய தேன்மொழி(வயது 55) என்ற பெண்ணை தெரு நாய் விரட்டியுள்ளது.
இதனால் அந்த தெரு நாயிடம் இருந்து தப்பிக்க வேகமாக சென்ற அவர், நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.
அதனால், சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட தேன்மொழி, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம், அந்த பகுதி மக்கள் இடையே பீதியையும் தெரு நாய்கள் மேல் வெறுப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
வெறி நாயின் வெறிச்செயல் - இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு SamugamMedia குரோம்பேட்டையில் தெரு நாய் விரட்டியதில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை என்றும் இல்லாத அளவுக்கு பெருகிவிட்டதாகவும் அவை சாலைகளில் செல்பவர்களை விரட்டி கடிப்பதும், விரட்டும்போது பொதுமக்கள் கீழே விழுந்து காயமடைவதும் தொடர்ந்து இடம் பெறுவதால் மக்கள் துன்பமடைந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட குரோம்பேட்டை, சுபாஷ் நகர், விஸ்வேஸ்வரன் தெருவில் டியூசன் முடிந்து சகோதரியுடன் வீட்டுக்கு சென்ற பிளஸ்-1 மாணவி, வெறிபிடித்த தெரு நாய் ஒன்று விடாமல் துரத்தியதில், கீழே விழுந்து காயமடைந்தார் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் 26-வது வார்டுக்கு உட்பட்ட குரோம்பேட்டை, காந்தி நகரில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் இரவு வேளை வெளியே சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய தேன்மொழி(வயது 55) என்ற பெண்ணை தெரு நாய் விரட்டியுள்ளது. இதனால் அந்த தெரு நாயிடம் இருந்து தப்பிக்க வேகமாக சென்ற அவர், நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். அதனால், சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட தேன்மொழி, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், அந்த பகுதி மக்கள் இடையே பீதியையும் தெரு நாய்கள் மேல் வெறுப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.