கம்பஹா பிரதேசத்தில் பழைய மினுவாங்கொட பகுதியில் அஸ்கிரிய பாலத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த பெண் ஒருவர் அத்தனகல ஓயாவில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அருகில் இருந்த மரமொன்றின் கிளையில் தொங்கி உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிர் பிழைத்தவர் உடுகம்பொல, கெஹல்பத்ததர பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஆவார்.
சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா அத்தனகல ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக வீதிகளை சாலைகளை பயன்படுத்துமாறு கம்பஹா பிரதான பொலிஸ் பரிசோதகர் மோகன் சில்வா தெரிவித்துள்ளார்.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண் மரக்கிளையில் தொங்கி உயிர் பிழைப்பு samugammedia கம்பஹா பிரதேசத்தில் பழைய மினுவாங்கொட பகுதியில் அஸ்கிரிய பாலத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த பெண் ஒருவர் அத்தனகல ஓயாவில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அருகில் இருந்த மரமொன்றின் கிளையில் தொங்கி உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிர் பிழைத்தவர் உடுகம்பொல, கெஹல்பத்ததர பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஆவார்.சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா அத்தனகல ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக வீதிகளை சாலைகளை பயன்படுத்துமாறு கம்பஹா பிரதான பொலிஸ் பரிசோதகர் மோகன் சில்வா தெரிவித்துள்ளார்.