• May 20 2024

நீர்கொழும்பில் இளம் குடும்பஸ்தர் கொடூரமாக படுகொலை..!நேரில் பார்த்த மனைவி வைத்தியசாலையில்..! samugammedia

Sharmi / May 23rd 2023, 1:28 pm
image

Advertisement

இளம் குடும்பஸ்தர் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் நீர்கொழும்பில் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

29 வயதுடைய அன்ரனி றொபேட் என்ற இளம் குடும்பஸ்தரே இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளார்.

அவர் தனது மனைவியுடன் வேலைக்குச் செல்ல ஆயத்தான போது முகமூடி அணிந்து கூரிய ஆயுதங்களுடன் காரில் வந்தவர்கள், அவரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் வெட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த இளம் குடும்பஸ்தர், அயலவர்களின் உதவியுடன் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த உயிரிழந்தவரின் மனைவி (வயது 25) மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த இளம் தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் இடம்பெற்ற போது குறித்த குழந்தை அயல் வீடான தாத்தாவின் (உயிரிழந்தவரின் தந்தை) வீட்டில் இருந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடன் பகையே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், கொலையாளிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

நீர்கொழும்பில் இளம் குடும்பஸ்தர் கொடூரமாக படுகொலை.நேரில் பார்த்த மனைவி வைத்தியசாலையில். samugammedia இளம் குடும்பஸ்தர் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் நீர்கொழும்பில் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய அன்ரனி றொபேட் என்ற இளம் குடும்பஸ்தரே இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளார். அவர் தனது மனைவியுடன் வேலைக்குச் செல்ல ஆயத்தான போது முகமூடி அணிந்து கூரிய ஆயுதங்களுடன் காரில் வந்தவர்கள், அவரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.சம்பவத்தில் வெட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த இளம் குடும்பஸ்தர், அயலவர்களின் உதவியுடன் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த உயிரிழந்தவரின் மனைவி (வயது 25) மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த இளம் தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளமை குறிப்பிடத்தக்கது.சம்பவம் இடம்பெற்ற போது குறித்த குழந்தை அயல் வீடான தாத்தாவின் (உயிரிழந்தவரின் தந்தை) வீட்டில் இருந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது. கடன் பகையே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், கொலையாளிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement