• May 25 2025

வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்; கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணை

Chithra / May 25th 2025, 11:44 am
image

 கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியில் உள்ள முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை, சடலத்தை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து விசாரணைகள் முன்னெக்கப்பட்டு வருகின்றது.

குறித்த சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

சடலமாக மீட்கப்பட்ட நபர் கிளிநொச்சி ஜெயந்தி நகரைச்சேர்ந்த சோமு கஜேந்திரமூர்த்தி என்ற 37 வயதான 03 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி குற்றத்தடுப்புப் பிரிவினர் பூர்வாங்க விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

விபத்தினால் குறித்த மரணம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.


வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்; கிளிநொச்சி பொலிஸார் தீவிர விசாரணை  கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியில் உள்ள முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை, சடலத்தை அவதானித்தவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து விசாரணைகள் முன்னெக்கப்பட்டு வருகின்றது.குறித்த சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் கிளிநொச்சி ஜெயந்தி நகரைச்சேர்ந்த சோமு கஜேந்திரமூர்த்தி என்ற 37 வயதான 03 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி குற்றத்தடுப்புப் பிரிவினர் பூர்வாங்க விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விபத்தினால் குறித்த மரணம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement