• May 17 2024

பஸ் மோதியதில் இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு! samugammedia

Tamil nila / May 20th 2023, 8:22 pm
image

Advertisement

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஸ்தலத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில், கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்ற ஏறாவூர் டிப்போவிற்குச் சொந்தமான பஸ், கல்முனையில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் ஏறாவூர் டிப்போவிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கிரான்குளம் விஸ்ணு கோயிலுக்கு முன்னால் தூங்கிக் கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் 23 வயது இளைஞனை மோதிவிட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதுடன் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.


பஸ் மோதியதில் இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு samugammedia காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஸ்தலத்திலேயே பலியானார்.இச்சம்பவம் இன்று அதிகாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இதில், கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்ற ஏறாவூர் டிப்போவிற்குச் சொந்தமான பஸ், கல்முனையில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் ஏறாவூர் டிப்போவிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கிரான்குளம் விஸ்ணு கோயிலுக்கு முன்னால் தூங்கிக் கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் 23 வயது இளைஞனை மோதிவிட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதுடன் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement