• Oct 19 2024

காதலனை கரம் பிடித்த இளம் பெண் பட்டப்பகலில் கடத்தல்..! பரபரப்பு சம்பவம்..! samugammedia

Chithra / Jun 6th 2023, 2:27 pm
image

Advertisement

கலப்பு திருமணம் செய்த பெண்ணை அவர்களது உறவினர்கள் பட்டப்பகலில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் அராரியா பகுதியில் வசித்து வரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் காதல் மலர்ந்தமையால் இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். 

காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வர அவர்கள் இளம் பெண்ணை கண்டித்த்துடன், அவரை வீட்டை விட்டு வெளியே செல்லவும் அனுமதிக்காமையால்  தனது காதலரை ரகசியமாக தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். 

இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்து கொண்ட பின்னர் இருவரும் அருகிலுள்ள  கிராமத்தில் தனியாக வசித்து வந்தமையை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை  வலுகட்டாயமாக இழுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர். 


இந்த சம்பவத்தை சிலர் தொலைபேசியில் காணொளியாக்கி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில்,  சமூக ஆர்வலர்கள் பெண்ணை அவரின் உறவினர்கள் ஆணவ கொலை செய்து விடுவார்கள் என்றும், அவர்களிடம் இருந்து பெண்ணை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனை தொடர்ந்து, இளம் பெண்ணை கடத்தி சென்றதாக அவரது காதலனின் பெற்றோர் பொலிஸாரிடம்  புகார் செய்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

காதலனை கரம் பிடித்த இளம் பெண் பட்டப்பகலில் கடத்தல். பரபரப்பு சம்பவம். samugammedia கலப்பு திருமணம் செய்த பெண்ணை அவர்களது உறவினர்கள் பட்டப்பகலில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அராரியா பகுதியில் வசித்து வரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் காதல் மலர்ந்தமையால் இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வர அவர்கள் இளம் பெண்ணை கண்டித்த்துடன், அவரை வீட்டை விட்டு வெளியே செல்லவும் அனுமதிக்காமையால்  தனது காதலரை ரகசியமாக தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்து கொண்ட பின்னர் இருவரும் அருகிலுள்ள  கிராமத்தில் தனியாக வசித்து வந்தமையை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை  வலுகட்டாயமாக இழுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை சிலர் தொலைபேசியில் காணொளியாக்கி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில்,  சமூக ஆர்வலர்கள் பெண்ணை அவரின் உறவினர்கள் ஆணவ கொலை செய்து விடுவார்கள் என்றும், அவர்களிடம் இருந்து பெண்ணை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து, இளம் பெண்ணை கடத்தி சென்றதாக அவரது காதலனின் பெற்றோர் பொலிஸாரிடம்  புகார் செய்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement