• May 14 2024

5 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய ஹஷீஷ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது! samugammedia

Chithra / Jul 12th 2023, 9:49 am
image

Advertisement

புத்தளம் கற்பிட்டி பகுதியில் ஹஷீஷ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 73 கிராம் 800 மில்லி கிராம் ஹஷீஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இதன்போது தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி நகரில் கடையொன்றில் வைத்து போதை வியாபாரத்தை முன்னெடுத்து வருவதாக என கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமையவே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரென இதன்போது தெரிவித்தனர் 


குறித்த சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹஷீஷ் போதைப்பொருள் 5 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியென இதன்போது தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட ஹஷீஷ் போதைப்பொருளையும் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.

5 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய ஹஷீஷ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது samugammedia புத்தளம் கற்பிட்டி பகுதியில் ஹஷீஷ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.கற்பிட்டி பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபரிடமிருந்து 73 கிராம் 800 மில்லி கிராம் ஹஷீஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இதன்போது தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி நகரில் கடையொன்றில் வைத்து போதை வியாபாரத்தை முன்னெடுத்து வருவதாக என கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமையவே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரென இதன்போது தெரிவித்தனர் குறித்த சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹஷீஷ் போதைப்பொருள் 5 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியென இதன்போது தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட ஹஷீஷ் போதைப்பொருளையும் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement