நடிகர் விஜய் நடித்து வெளியான லியோ படத்தை பார்க்கச் சென்ற இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி வாள் வெட்டில் முடிந்துள்ளது.
மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (20) குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில், 4 பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒருவர் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.