இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அகமதாபாத் பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிய 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சுவரொட்டி பிரச்சாரத்தை தொடங்கிய ஒரு நாள் கழித்து இந்த கைது நடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 08 பேரும் ஆம் ஆத்மி கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்கள் அகமதாபாத்தின் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி போராட்ட உரைகளுடன் போஸ்டர்களை ஒட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.