• May 17 2024

உணவகத்திற்கு சென்ற 10 பேர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி..! samugammedia

Chithra / Oct 20th 2023, 11:05 am
image

Advertisement

 

தலவாக்கலை கடையொன்றில் இயங்கி வந்த ஜெனரேட்டரில் இருந்து வெளியான புகையை சுவாசித்த பெண்கள் உட்பட 10 பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த கடையின் ஒன்பது பெண் ஊழியர்களும் ஒரு ஆண் ஊழியரும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ள தரை தளத்தில் உணவு உண்பதற்காக சென்ற ஊழியர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளான அனைத்து நோயாளர்களும் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலையிலிருந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உணவகத்திற்கு சென்ற 10 பேர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி. samugammedia  தலவாக்கலை கடையொன்றில் இயங்கி வந்த ஜெனரேட்டரில் இருந்து வெளியான புகையை சுவாசித்த பெண்கள் உட்பட 10 பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.அந்த கடையின் ஒன்பது பெண் ஊழியர்களும் ஒரு ஆண் ஊழியரும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ள தரை தளத்தில் உணவு உண்பதற்காக சென்ற ஊழியர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சுவாசிப்பதில் சிரமத்திற்கு உள்ளான அனைத்து நோயாளர்களும் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலையிலிருந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement