வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் சங்காபிஷேக நிகழ்வு இன்று ஆரம்பமாகி நடைபெறுகின்றது.
இந்நிலையில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வர பெருமானுக்கு 108 கலச சங்காபிஷேகம் நிகழப்பெற்று வருகின்றது.
மேள தாளங்களுடன் சிறப்பாக இடம்பெறும் சங்காபிஷேகத்தில் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் காணப்பட்ட விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களால் கடந்த மாத முற்பகுதியில் சேதமாக்கப்பட்டும் களவாடப்பட்டும் இருந்த நிலையில் சைவ அமைப்புக்களின் முயற்சியினால் மீண்டும் அதே இடத்தில் விக்கிரகங்கள் மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டு தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.