மட்டக்களப்பு–திருகோணமலை வீதியில் ஓட்டமாவடி ரயில் கடவைக்கு அருகில் நடந்த விபத்தில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த 13 வயதான சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரும் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய தனியார் பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். சாரதி மது போதையில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஓட்டமாவடி விபத்து - 13 வயதான சிறுமி உயிரிழப்பு samugammedia மட்டக்களப்பு–திருகோணமலை வீதியில் ஓட்டமாவடி ரயில் கடவைக்கு அருகில் நடந்த விபத்தில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது.விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த 13 வயதான சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரும் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.விபத்துடன் தொடர்புடைய தனியார் பேருந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். சாரதி மது போதையில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.