• May 19 2024

நண்பர்களுடன் நீராடச் சென்ற 13 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்..! samugammedia

Chithra / Sep 23rd 2023, 12:05 pm
image

Advertisement

கம்புருபிட்டிய, கிராம்ப ஆரா ஓயாவில் நேற்று 13 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கிராம்ப ஆரா ஓயா சபுகொட பிரதேசத்தில் குழுவொன்று குளித்துக் கொண்டிருந்த போது, ​​குறித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாடசாலையில் ஹொக்கி பயிற்சிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது ​​குறித்த சிறுமி மேலும் ஒன்பது நண்பர்களுடன் நீராடச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவி கம்புருபிட்டிய, உல்வல பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நண்பர்களுடன் நீராடச் சென்ற 13 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம். samugammedia கம்புருபிட்டிய, கிராம்ப ஆரா ஓயாவில் நேற்று 13 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.கிராம்ப ஆரா ஓயா சபுகொட பிரதேசத்தில் குழுவொன்று குளித்துக் கொண்டிருந்த போது, ​​குறித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.பாடசாலையில் ஹொக்கி பயிற்சிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது ​​குறித்த சிறுமி மேலும் ஒன்பது நண்பர்களுடன் நீராடச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த மாணவி கம்புருபிட்டிய, உல்வல பிரதேசத்தைச் சேர்ந்தவர்.பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement