சூடானில் சிக்கியிருந்த 138 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்து நிபுணர்களும் அவர்களுடைய குடும்பத்தினருமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் 35 பெண்கள், 12 குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.