மாமனிதர் நடராஜா ரவிராஜின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் நேற்று(10) இடம்பெற்றது .
இந்த நிகழ்வானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஈகைச் சுடரேற்றி, மாமனிதரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.