புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் பத்துலு ஓயாவில் 18 வயது யுவதி ஒருவர் பாய்ந்து உயிர்மாய்த்துள்ளார்.
இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர் புத்தளம் கறிகட்டை பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது.
மேற்படி யுவதி புகையிரதம் வருவதை அவதானித்து விட்டு தனது கைப்பையை எறிந்து விட்டு தண்டவாளத்தில் தலையை வைத்து கொண்டதாக அவதானித்தவர்கள் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.