விவசாய திணைக்களத்திடம் தற்போது, 19 ஆயிரம் மெற்றிக் டன் குரக்கன் விதைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் போகத்திற்கு பயிரிடுவதற்கு தேவையான அளவை காட்டிலும் அதிகளவில் இருப்பதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், மாத்தளை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் மேலும் 7 ஆயிரத்து 500 மெற்றிக் டன் குரக்கன் விதைகள் கையிருப்பில் உள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.