யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய
படுகொலையின் 28 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று(22) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்
மகா வித்தியாலய பாடசாலை மீது 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி
இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 21 மாணவர்கள்
உட்பட 39 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
குறித்த படுகொலை நிகழ்வின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று(22) நண்பகல் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில்,
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்தவர்களது உறவினர்கள்
மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.