• May 17 2024

அமெரிக்காவில் இனவெறி துப்பாக்கிச்சூடு - கருப்பினத்தவர்கள் 3 பேர் உயிரிழப்பு ! samugammedia

Tamil nila / Aug 27th 2023, 4:42 pm
image

Advertisement

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வெலி பகுதியில் இன்று துப்பாக்கிச்சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் வெள்ளை இனத்தவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கருப்பினத்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண், இரு ஆண்கள் என கருப்பினத்தவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆனால், காவல்துறையினர் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய வெள்ளை இனத்தவர் 

தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவில் இனவெறி துப்பாக்கிச்சூடு - கருப்பினத்தவர்கள் 3 பேர் உயிரிழப்பு samugammedia அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், அந்நாட்டின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வெலி பகுதியில் இன்று துப்பாக்கிச்சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது.அப்பகுதியில் வெள்ளை இனத்தவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கருப்பினத்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண், இரு ஆண்கள் என கருப்பினத்தவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.ஆனால், காவல்துறையினர் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய வெள்ளை இனத்தவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement