அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் திடீர் என ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் ஒன்பது மாதக் குழந்தையை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 5 நிமிடங்களில் ஆறு அங்குலத்துக்கும் அதிகமான மழை பெய்ததாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று கார்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.