சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச்செல்ல முற்பட்டபோது பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு கடல்வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்செல்ல முற்பட்ட போது 55 பேர் பருத்தித்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
இவ் வழக்கு நேற்று (07) எடுத்துக் கொள்ளப்பட்ட போது 32 பேர் மன்றையில் ஆஜராகி இருந்தனர்.
அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட அதன் அடிப்படையில ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் 10 மாத கால சாதாரண சிறை தண்டனை என்ற அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுதுரை உத்தரவிட்டார்.
தண்ட பணத்தை ஒன்பதாம் மாதம் ஏழாம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனையில் விதிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவுக்கு தப்பிக்க முயன்ற 32 பேர்- நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு samugammedia சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச்செல்ல முற்பட்டபோது பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த 2013 ஆம் ஆண்டு கடல்வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்செல்ல முற்பட்ட போது 55 பேர் பருத்தித்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.இவ் வழக்கு நேற்று (07) எடுத்துக் கொள்ளப்பட்ட போது 32 பேர் மன்றையில் ஆஜராகி இருந்தனர். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட அதன் அடிப்படையில ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் 10 மாத கால சாதாரண சிறை தண்டனை என்ற அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுதுரை உத்தரவிட்டார்.தண்ட பணத்தை ஒன்பதாம் மாதம் ஏழாம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனையில் விதிக்கப்பட்டது.