குருநாகல் – ஹெட்டிபொல பகுதியில் களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் முட்டைகளை நுகர்வோர் அதிகாரசபை மீட்டுள்ளது.
முட்டைகளை கொள்வனவு செய்யும் போர்வையில் முகவர் ஒருவரை பயன்படுத்தி இன்று மதியம் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபையின் அவசர சோதனை பிரிவின் சிரேஷ்ட அதிகாரி யு.பி. பெரேரா தெரிவித்துள்ளார்,
குறித்த களஞ்சிய சாலையின் உரிமையாளரான பெண்ணொருவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முட்டைக்காக விதிக்கப்பட்டிருந்த உச்சபட்ச சில்லறை விலையை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது