இந்திய மாநிலம் உத்திர பிரதேசத்தில் இறந்த கணவரின் தாய் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொண்டதாக பெண் விசித்திர புகார் அளித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவின் கமலா நகர் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், சைன்யா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை.ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்த நபர், திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் மனமுடைந்து போன அவரது மனைவி, தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனிடையே இறந்த அவரது கணவரின் பெற்றோருக்கு, ஒரே ஒரு மகன் மட்டும் தான் என்பதால், சொத்து யாருக்கு போய் சேரும் என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த பெண் தனக்கு கணவரின் சொத்தில் பங்கு கொடுங்கள் என கேட்டுள்ளார். ஆனால் அவரது கணவரின் பெற்றோருக்கு தங்களது மருமகளுக்கு சொத்தை தர மனம் வரவில்லை. இதனால் அவர் கணவரின் பெற்றோர் அதிரடியாக ஒரு முடிவு எடுத்துள்ளனர்.அதன்படி தனது ஒரே மகன் இறந்து விட்டதால் சொத்துக்கு வாரிசு இல்லாமல், மருமகளுக்கு சொத்து போக கூடாது என யோசிக்க தொடங்கி உள்ளனர். இதையடுத்து பெண்ணின் மாமியார் 58 வயதில் கர்ப்பமாகி, ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், தனக்கு சொத்து கிடைக்க கூடாது என்ற நோக்கத்தில், தான் மாமியார் குழந்தை பெற்றுள்ளார் என பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.இந்த விசித்திரமான புகாரை கேட்ட பொலிஸார், என்ன செய்வதென தெரியாமல் விழித்துள்ளனர். இந்நிலையில் தற்போது அந்த புகாரை, குடும்ப நல ஆலோசனை மையத்திற்கு மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
58 வயதில் குழந்தை பெற்று கொண்ட கணவனின் தாய் மருமகள் அளித்த விசித்திர புகார் samugammedia இந்திய மாநிலம் உத்திர பிரதேசத்தில் இறந்த கணவரின் தாய் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொண்டதாக பெண் விசித்திர புகார் அளித்துள்ளார்.உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவின் கமலா நகர் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், சைன்யா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை.ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்த நபர், திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் மனமுடைந்து போன அவரது மனைவி, தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.இதனிடையே இறந்த அவரது கணவரின் பெற்றோருக்கு, ஒரே ஒரு மகன் மட்டும் தான் என்பதால், சொத்து யாருக்கு போய் சேரும் என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்த பெண் தனக்கு கணவரின் சொத்தில் பங்கு கொடுங்கள் என கேட்டுள்ளார். ஆனால் அவரது கணவரின் பெற்றோருக்கு தங்களது மருமகளுக்கு சொத்தை தர மனம் வரவில்லை. இதனால் அவர் கணவரின் பெற்றோர் அதிரடியாக ஒரு முடிவு எடுத்துள்ளனர்.அதன்படி தனது ஒரே மகன் இறந்து விட்டதால் சொத்துக்கு வாரிசு இல்லாமல், மருமகளுக்கு சொத்து போக கூடாது என யோசிக்க தொடங்கி உள்ளனர். இதையடுத்து பெண்ணின் மாமியார் 58 வயதில் கர்ப்பமாகி, ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், தனக்கு சொத்து கிடைக்க கூடாது என்ற நோக்கத்தில், தான் மாமியார் குழந்தை பெற்றுள்ளார் என பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.இந்த விசித்திரமான புகாரை கேட்ட பொலிஸார், என்ன செய்வதென தெரியாமல் விழித்துள்ளனர். இந்நிலையில் தற்போது அந்த புகாரை, குடும்ப நல ஆலோசனை மையத்திற்கு மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.