ஜனாதிபதி செயலகத்தில் 60 அதிகாரிகளை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 41வது சரத்தின் விதிகளுக்கு அமைய ஜனாதிபதி இந்த நியமனங்களை செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட குழுவில் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவி செயலாளர்கள், ஜனாதிபதியின் உதவி செயலாளர்கள், முழுநேர பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் நிதி அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.