பிரேசிலில் மதுக்கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நேற்று (11.07.2023) பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் இருவருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் 2 சந்தேக நபர்கள் மோட்டர் சைக்கிளில் வந்து சுமார் 20 முறை மதுக்கூடத்தினுள் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சாவ் பாவ்லோ குண்டர் கும்பல்களுக்கு இடையே நிலவும் விரிசல் காரணமாகத் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது