சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மத சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெற்கின் பூகோள விழுமியங்களை மதிக்குமாறும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் மேற்கத்திய நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.