மாத்தளை பகுதியில் சட்டவிரோதமாக டொலமைட் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, மாத்தளை திக்கிரியாவத்த பகுதியில் முன்னெடுக்கபட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தளை மற்றும் அலுவிகாரை பகுதியைச் சேர்ந்த 44 முதல் 57 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஒருகோடியே 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க பாளங்களை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவர முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் காலி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் என்பதுடன், அவரது பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 616 கிராம் நிறையுடடைய 5 தங்க பாளங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தளையில் டொலமைட் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது samugammedia மாத்தளை பகுதியில் சட்டவிரோதமாக டொலமைட் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, மாத்தளை திக்கிரியாவத்த பகுதியில் முன்னெடுக்கபட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மாத்தளை மற்றும் அலுவிகாரை பகுதியைச் சேர்ந்த 44 முதல் 57 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, ஒருகோடியே 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க பாளங்களை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவர முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் காலி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் என்பதுடன், அவரது பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 616 கிராம் நிறையுடடைய 5 தங்க பாளங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.