யாழில் இருந்து இரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இன்று அதிகாலை தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்களே இன்று அதிகாலை 2 மணியளவில் தமிழகம் தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளனர்.
3 ஆண்கள் இரு பெண்கள் இரு சிறுவர்கள் என மொத்தம் ஏழுபேரே இவ்வாறு தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.
தமிழகம் சென்றவர்களை பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரியவருகின்றது.