தெலுங்கானா மாநிலம் வாரங்கல்-காசிபேட் பகுதியில் உள்ள ரெயில்வே காலனி
அருகே உள்ள பூங்காவில் தெருநாய்கள் கூட்டம் கடித்ததில் 7 வயது சிறுவன்
உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம்
மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சாலையோரங்களில் சிறிய பொருட்களை விற்கும்
குடிபெயர்ந்தவர்களின் மகன் சோட்டு (வயது 7).
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று சிறுவன் பூங்காவில் விளையாடிக்
கொண்டிருந்த போது தெருநாய்கள் தாக்கின.
நாய் ஒன்று சிறுவனின் கழுத்தைப்
பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து படுகாயமடைந்த சிறுவன், எம்ஜிஎம்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தான்.
வாரங்கல் மேற்கு தொகுதி எம்எல்ஏ தாஸ்யம் வினய் பாஸ்கர், நகர
மேயர் குண்டா பிரகாஷ் ராவ் ஆகியோர் குழந்தையின் குடும்பத்தை நேரில்
சந்தித்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினர்.
சமீப காலமாக தெருநாய்களின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
ஏப்ரல் கடைசி வாரத்தில் ஹனுமகொண்டாவில் மட்டும் குழந்தைகள், பெரியவர்கள்
மீது என 29 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு
காண உள்ளூர் மக்களும், புலம்பெயர்ந்தோரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக
அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், இன்னும் அதிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தெருநாய்கள் கடித்து 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia தெலுங்கானா மாநிலம் வாரங்கல்-காசிபேட் பகுதியில் உள்ள ரெயில்வே காலனி
அருகே உள்ள பூங்காவில் தெருநாய்கள் கூட்டம் கடித்ததில் 7 வயது சிறுவன்
உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம்
மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சாலையோரங்களில் சிறிய பொருட்களை விற்கும்
குடிபெயர்ந்தவர்களின் மகன் சோட்டு (வயது 7).
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று சிறுவன் பூங்காவில் விளையாடிக்
கொண்டிருந்த போது தெருநாய்கள் தாக்கின. நாய் ஒன்று சிறுவனின் கழுத்தைப்
பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து படுகாயமடைந்த சிறுவன், எம்ஜிஎம்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தான். வாரங்கல் மேற்கு தொகுதி எம்எல்ஏ தாஸ்யம் வினய் பாஸ்கர், நகர
மேயர் குண்டா பிரகாஷ் ராவ் ஆகியோர் குழந்தையின் குடும்பத்தை நேரில்
சந்தித்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினர்.
சமீப காலமாக தெருநாய்களின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
ஏப்ரல் கடைசி வாரத்தில் ஹனுமகொண்டாவில் மட்டும் குழந்தைகள், பெரியவர்கள்
மீது என 29 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு
காண உள்ளூர் மக்களும், புலம்பெயர்ந்தோரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக
அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், இன்னும் அதிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.