நிறுவனம் ஒன்று அதன் ஊழியர்களுக்கு ஒன்பது நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை வழங்குவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட HackerRank என்ற மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமே இவ்வாறு தனது ஊழியர்களிற்கு ஓய்வினை வழங்குகின்றது.
அதாவது, அந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஓய்வு மற்றும் புத்துணர்வு போன்றவற்றை பெறும் நோக்கிலே இந்த ஓய்வினை வழங்குகின்றது.
சமூக வலைதள பயனர் ஷைலேந்திர பாண்டே என்பவர் அவ் நிறுவனம் அனுப்பிய உள் மின்னஞ்சலின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார்.
அந்த ஸ்கிரீன்ஷாட்டில், ஜூலை 1 தொடக்கம் ஜூலை 9 வரை, ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குவதற்கான தனது நிறுவனத்தின் முடிவை அறிவித்துள்ளமை தெரியவருகின்றது.
அத்துடன் பாண்டே, HackerRank நிறுவனத்தின் இந்த விடயம் மிகவும் சிறந்தது என்றும் அனைத்து ஊழியர்களின் நலனை கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த முன்னெடுப்பு பாராட்டிற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.